புத்தாண்டு கொண்டாட்டம் எதிரொலி.. நள்ளிரவு 1 மணிவரை மதுபானம் விற்க அனுமதி.!

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள கடற்கரை விடுதிகளில் கொரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறையை பின்பற்றி புத்தாண்டு கொண்டாட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு ஊர்களில் இருந்தும் சுற்றுலாப்பயணிகள் புதுச்சேரிக்கு வருகை தந்துள்ளனர்.
இந்த நிலையில், புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ரெஸ்டாரண்ட் பார்களில் நள்ளிரவு 1 மணிவரை மதுபானம் விற்பனை செய்ய கலால் துறை சிறப்பு அனுமதி வழங்கியிருக்கிறது. பிற மதுபானக்கடைகளில் இரவு 11 மணிவரை மதுபானம் விற்பனை செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் 2 பேருக்கு ஓமிக்ரான் வகை கொரோனா உறுதியாகியுள்ள நிலையில், புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு வரும் நிலையில், கட்டுப்பாடுகளுடன் அதனை கொண்டாட அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.