அழகு நிலையத்தில் விபச்சாரம்.. 4 அழகிகளுடன்., 2 வாலிபர்கள்.. கணவன், மனைவி பகீர் செயல்.!

அழகு நிலையத்தில் விபச்சாரம்.. 4 அழகிகளுடன்., 2 வாலிபர்கள்.. கணவன், மனைவி பகீர் செயல்.!



pondicherry-beauty-spa-turned-prostitution-center-polic

4 பெண்களை வைத்து அழகு நிலையத்தில் விபசாரத்தொழில் நடத்தி வந்த தம்பதிக்கு வலைவீப்பட்டுள்ளது. வாடிக்கையாளராக இருந்த 2 பேர் கைது செய்யப்பட்டு, 4 பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

புதுச்சேரி மாநிலத்தில் அழகுநிலையம், மசாஜ் சென்டர் பெயரில் ஹைடெக் விபச்சார தொழில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக புதுச்சேரிக்கு சுற்றுலா செல்லும் நபர்களை குறிவைத்து விபச்சார தொழில் கொடிகட்டி பறந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். 

இந்நிலையில், பாண்டிச்சேரியில் உள்ள காந்தி வீதி தெருவில் அழகு நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த அழகு நிலையத்தில் விபச்சார தொழில் நடைபெற்று வருவதாக ஓதியஞ்சாலை காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் அழகு நிலையத்திற்குள் அதிரடி சோதனை நடத்தினர். 

Pondicherry

அப்போது, அழகு நிலையத்தில் விபசாரம் நடைபெறுவது உறுதியாகவே, அங்கிருந்த 4 இளம்பெண்கள் மீட்கப்பட்டனர். மேலும், விபச்சார அழகிகளுடன் உல்லாசமாக இருக்க வந்த பிரவீன் குமார், பிரேம்நாத் ஆகியோரையும் அதிகாரிகள் கைது செய்தனர். அழகு நிலையத்தை நடத்தி வந்த மோகன்ராஜ், அவரின் மனைவி கலா ஆகியோரை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.