#JustIN: கடலில் குளித்துக்கொண்டிருந்த மாணவ - மாணவிகள் 4 பேர் மாயம்; கண்ணீரில் பரிதவித்த தாய்.. தேடுதல் பணிகள் தீவிரம்.! 

#JustIN: கடலில் குளித்துக்கொண்டிருந்த மாணவ - மாணவிகள் 4 பேர் மாயம்; கண்ணீரில் பரிதவித்த தாய்.. தேடுதல் பணிகள் தீவிரம்.! 



pondicherry-4-children-missing-tidal-wave

 

புத்தாண்டு கொண்டாட்டம் விடுமுறையை முன்னிட்டு, பலரும் புதுச்சேரியில் உள்ள கடற்கரையில் குவிந்த வண்ணம் இருக்கின்றனர். இதனால் மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, காவல் துறையினர் மக்களை கடலுக்குள் இறங்க விடாமல் தடுத்து அறிவுறுத்தி வருகின்றனர். 

இருப்பினும், சிலர் அதிகாரிகளின் கண்காணிப்பை மீறி செயல்பட்டு வந்தனர். இந்நிலையில், புதுச்சேரி உள்ள நெல்லித்தோப்பு பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன். இவரின் மனைவி மீனாட்சி. இவர்களின் மகள்கள் 10ம் வகுப்பு படிக்கும் மோகனா, 12ம் வகுப்பு படிக்கும் மோகனா. அதேபோல, கதிர்காமம் பகுதியை சேர்ந்த நவீன், கிஷோர் ஆகிய சிறார்கள், புதுச்சேரி கடலில் குளித்துக்கொண்டு இருந்தபோது ராட்சத அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டுள்ளனர். 

இதனால் பதறிப்போன குடும்பத்தினர் அலறவே, உடனடியாக நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள் கடலோர காவல் துறையினர், மீனவர்களின் உதவியுடன் மாயமானவர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது. குழந்தைகளுடன் வந்த தாய், தனது 2 மகள்கள் அலையில் சிக்கியதை உணர்ந்து அவர்களின் உயிரை எண்ணி கண்ணீரில் தவிப்பது அங்கிருந்தோரை சோகத்திற்கு உள்ளாக்கியது. 

சென்னை நீலாங்கரை கடற்கரையில் இன்று 2 இளைஞர்கள் கடல் அலையில் சிக்கி பலியானது குறிப்பிடத்தக்கது.