இரண்டு முக்கிய நடிகர்களின் மரணத்தால் சோகத்தில் மூழ்கிய பிரதமர் மோடி.! அவர் பதிவிட்ட உருக்கமான பதிவு.!

இரண்டு முக்கிய நடிகர்களின் மரணத்தால் சோகத்தில் மூழ்கிய பிரதமர் மோடி.! அவர் பதிவிட்ட உருக்கமான பதிவு.!



pm modi tribute actors death

டிடி நெஷனல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபல இந்தி டிவி சீரியல் நிகழ்ச்சியான ’ராமாயண்’ தொடரில் ராவணன் கதாப்பாத்திரத்தில் நடித்தவர் அரவிந்த் திரிவேதி. இவர் ஹிந்தி மற்றும் குஜராத்தி மொழியில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 

ராவணன் கதாப்பாத்திரத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய அரவிந்த் திரிவேதி திடீர் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். இந்நிலையில் அவரது மறைவிற்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில், பிரபல இந்தி திரைப்பட மற்றும் டிவி சீரியல் நடிகரான கணேஷ்யாம் நாயக் தனது 77 வது வயதில் கடந்த 3-ம் தேதி உயிரிழந்தார். 

இந்நிலையில், அரவிந்த் திரிவேதி மற்றும் கணேஷ்யாம் நாய்க் ஆகிய இரண்டு நடிகர்களின் மரணத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதெடர்பாக பிரதமர் மோடி பதிவிட்ட ட்விட்டர் பதிவில், "கடந்த சில நாட்களில், தங்கள் திறமை மூலம் மக்களின் மனதை வென்ற இரண்டு திறமையான நடிகர்களை நாம் இழந்துள்ளோம். அரவிந்த் திரிவேதி சிறந்த நடிகர் மட்டுமல்ல, அவர் பொதுச்சேவையில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். ராமாயண் தொடரில் நடித்ததற்காக அவர் பல தலைமுறை இந்தியர்களாலும் நினைவில் கொள்ளப்படுவார்.  இரு நடிகர்களின் குடும்பங்களுக்கும், ரசிகர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம் சாந்தி’’ என பதிவிட்டுள்ளார்.