உச்சத்தில் ஒமைக்ரான்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய தகவல் இதோ..

உச்சத்தில் ஒமைக்ரான்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய தகவல் இதோ..



Omicron cases crossed 1000 in india

இந்தியா முழுவதும் ஒமைக்ரான் பாதிப்பு வேகமெடுக்க தொடங்கியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலில், இன்று காலை நிலவரப்படி இந்தியா முழுவதும் 1,270 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், 23 மாநிலங்களில் ஒமைக்ரான் பரவி இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

நேற்றைய நிலவரப்படி 961 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பதாக கூறப்பட்டு இருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 1,270 ஆக உள்ளது. குறிப்பாக மகாராஷ்டிரா மற்றும் டெல்லி ஆகிய 2 மாநிலங்களிலும் ஒமைக்ரான் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பரவ தொடங்கியுள்ளது.

இன்றைய நிலவரப்படி மகாராஷ்டிராவில் மட்டும் 450 பேருக்கு ஒமைக்ரான் வகை கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. அதேபோல் டெல்லியில் 320 பேருக்கும், கேரளாவில் 109 பேருக்கும் ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

குஜராத்தில் 97, ராஜஸ்தானில் 69, தெலுங்கானாவில் 62 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதியாகியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை 46 பேர் ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது.

கர்நாடகாவில் 34 பேரும், ஆந்திராவில் 16 பேரும், அரியானாவில் 12 பேரும் ஒமைக்ரான் தாக்குதலுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஒமைக்ரானை கட்டுப்படுத்த இந்த மாநிலங்களில் கட்டுப்பாடு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.