உங்களை யாரு காப்பாத்துவா? - நீதிகேட்ட மாணவிகளின் ஆடைகளை கிழித்து பலாத்கார மிரட்டல்.!!



odisha students sexual harassment for protest against student's suspicious death

நீதிகேட்ட மாணவிகளின் ஆடைகளை கிழித்து மர்ம நபர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்திய பயங்கரம் நடந்துள்ளது.

ஒடிசா மாநிலத்தில் உள்ள புவனேஸ்வர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் மாணவி ஒருவர் பயின்று வந்தார். இவர் சமீபத்தில் விடுதி அறையில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். 

நீதி கேட்டு போராட்டம்

இதனை சந்தேகித்த சக மாணவிகள் இறந்த மாணவியின் மரணத்திற்கு நீதி வேண்டுமென போராட்டம் நடத்தி வந்தனர். இதனிடையே சம்பவத்தன்று விடுதி வளாகத்துக்குள் புகுந்த சில நபர்கள் மாணவிகளின் ஆடைகளை கிழித்து துன்புறுத்தி பாலியல் தொல்லை அளித்துள்ளனர். 

இதையும் படிங்க: பீரியட்ஸ் அப்ப ஏண்டி சமைச்ச? மனைவி கழுத்தை நெரித்துக்கொலை..!

odisha students

பாலியல் தொல்லை

மேலும் "ஒரு பெண்ணிற்காக நீங்கள் போராடுகிறீர்கள் அல்லவா, உங்களை காப்பாற்ற யார் வருவார் என பார்ப்போம்" எனக் கூறி இந்த பாலியல் அத்துமீறல் சம்பவம் நடந்துள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து புகார் அளிக்கப்பட்ட நிலையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: கள்ளக்காதலனுடன் கட்டிலில் இருந்த மனைவி.. கூறுபோட்டு கொடூரத்தை அரங்கேற்றிய கணவன்.!!