என்னது.. பணத்திற்காகவா.! நிக்கோலை திருமணம் செய்ய காரணம் இதுதான்.! ஓப்பனாக உடைத்த நடிகை வரலட்சுமி!!
என் பேச்சை கேட்காத மகள் எனக்கு வேண்டாம் - 8 வயது சிறுமி கழுத்தறுத்து கொலை முயற்சி.!
என் பேச்சை கேட்காத மகள் எனக்கு வேண்டாம் - 8 வயது சிறுமி கழுத்தறுத்து கொலை முயற்சி.!
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள போபால் பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமி, தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்.
சம்பவத்தன்று சிறுமியின் தந்தையின் சொல்பேச்சை கேட்காமல், தனது தாத்தா - பாட்டியின் வீட்டிற்கு செல்ல முற்பட்டுள்ளார்.
அதற்கு சிறுமியின் தந்தை கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கவே, எனது பேச்சை கேட்காத நீ எனக்கு வேண்டாம் என மகளின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயற்சித்து இருக்கிறார்.
மகளின் கழுத்தை அறுத்து தந்தை தப்பி சென்ற நிலையில், சிறுமி எப்படியோ எழுந்து வந்து அக்கம் பக்கத்தினரிடம் உதவி கேட்டுள்ளார்.
உடனடியாக மீட்கப்பட்டு சிறுமி மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்ட நிலையில், விசாரணையில் அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.
தற்போது சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டு இருக்கிறார்.