கஞ்சா குடிப்பியா... மகனை கட்டிவைத்து கண்ணில் மிளகாய்ப்பொடி தூவி கண்டித்த தாய்.. பாசமிகு தாயின் பதறவைக்கும் செயல்..!

கஞ்சா குடிப்பியா... மகனை கட்டிவைத்து கண்ணில் மிளகாய்ப்பொடி தூவி கண்டித்த தாய்.. பாசமிகு தாயின் பதறவைக்கும் செயல்..!



mother punished her son for his bad habit

தனது மகனை கஞ்சாப்பழக்கத்தில் இருந்து மீட்க தாய், சிறுவனை கம்பத்தில் கட்டிவைத்து கண்களில் மிளகாய் பொடி தூவிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள சூர்யாபேட்டை மாவட்டம், கோடாட் பகுதியில் வசித்து வரும் ஒரு பெண் தனது 15 வயது மகன் கஞ்சாவுக்கு அடிமையானது தெரியவந்த நிலையில்,  அவரை திருத்துவதற்காக திட்டம் தீட்டியுள்ளார்.

அந்த திட்டத்தின்படி, அவரை கம்பத்தில் கட்டிவைத்து கண்களில் மிளகாய் பொடியை தூவியுள்ளார். இதனால் சிறுவனின் கண்கள் எரிச்சலடைந்த நிலையில், தாயை கண்களில் மிளகாய்பொடி  தூவவிடாமல் செய்ததால் மற்றொரு பெண் உதவியுடன் முகம் முழுவதும் மிளகாய் பொடியை பூசியுள்ளார்.

இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் கைவிடுமாறு கூறியும் அதனை தாய் கேட்கவில்லை. எனது மகன் 'கஞ்சா பழக்கத்தை கைவிடுவதாக எனக்கு உறுதி அளித்தால் மட்டுமே, நான் தண்டனையை  கை விடுவேன்' என்று காரசாரமாக பேசியுள்ளார்.

இதனைக்கேட்டு முதலில் தயங்கிய சிறுவன், கண்களில் ஏற்படும் எரிச்சல் பொறுக்க முடியாமல் 'இனி நான் கஞ்சா பழக்கத்தை கைவிட்டு விடுகிறேன், தயவு செய்து என்னை விட்டுவிடுங்கள்' என அலறித் துடித்துள்ளான்.

சிறுவன் உறுதியளித்ததை அடுத்து அந்த பெண் தனது மகனின் கை கட்டுகளை அவிழ்த்து விட்டுள்ளார். இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.