அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
அச்சச்சோ.. பரவுகிறது பன்றிக்காய்ச்சல்.. மக்களே அலெர்ட்.. அதிரடி தடை விதித்த அரசு.!
ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் பரவி வருவதால், மறுஉத்தரவு வரும் வரையில் பன்றி இறக்குமதிக்கு தடை விதிப்பதாக மிசோரம் அரசு அறிவித்துள்ளது.
மிசோராமில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ள நிலையில், பன்றிகள் மற்றும் பன்றி இறைச்சியை இறக்குமதி செய்ய அம்மாநில அரசு தடை விதித்து இருக்கிறது.
மறுஉத்தரவு வரும் வரையில் பிற மாநிலம் மற்றும் நாடுகளில் இருந்து உயிரோடு இருக்கும் பன்றி இறைச்சியை உபயோகம் செய்ய கூடாது. இறக்குமதி செய்யவும் கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பன்றிகள் வளர்க்கப்பட்டு வரும் இடத்தை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யவும், சுகாதார நடவடிக்கை எடுக்கவும், சந்தேகத்திற்கு இடமான வகைகளை தனிமைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க கால்நடைத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.