இந்த கொரோனா இன்னும் என்னெல்லாம் செய்ய காத்திருக்கோ.! உதவாத உறவினர்கள்..! தந்தையின் உடலை சைக்கிளில் கொண்டு சென்று அடக்கம் செய்த மகன்.!

இந்த கொரோனா இன்னும் என்னெல்லாம் செய்ய காத்திருக்கோ.! உதவாத உறவினர்கள்..! தந்தையின் உடலை சைக்கிளில் கொண்டு சென்று அடக்கம் செய்த மகன்.!



Man dead body carried by cycle over corona fear

உறவினர்கள் யாரும் உதவ முன்வராதநிலையில் இறந்தவரின் சடலத்தை அவரது மகன் சைக்கிள் கொண்டுசென்று அடக்கம் செய்த சம்பவம் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் ஹூப்பளி பகுதியை சேர்ந்த 71 வயது முதியவர் ஒருவர் கொரோனா அறிகுறிகளுடன் உடல்நிலை பாதிக்கப்பட்டு அவரது வீட்டிலையே உயிரிழந்துள்ளார். அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படாதநிலையில் அவருக்கு கொரோனா இருக்குமோ என்ற அச்சத்தில் அக்கம் பக்கத்தினர், உறவினர்கள் யாரும் அவரது இறுதி சடங்கில் கலந்துகொள்ள முன்வரவில்லை.

அவரது உடலையும் அடக்கம் செய்ய யாரும் முன்வராத காரணத்தால் இறந்தவரின் உறவினர்கள் இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய ஆம்புலன்ஸ் உதவி கேட்டுள்ளனர். ஆனால் ஆம்புலன்ஸ் வரவில்லை என கூறப்படுகிறது. அதேநேரம் கொரோனா அச்சம் காரணமாக சுகாதாரத்துறை ஊழியர்களும் இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய முன்வரவில்லை.

இதனால் என்ன செய்வது என்று தெரியாமல், இறந்தவரின் மகன் மற்றும் மருமகன் இருவரும் கிராம நிர்வாகம் கொடுத்த பாதுகாப்பு உடைகளை அணிந்துகொண்டு இறந்தவரின் உடலை பிளாஸ்டிக் கவரில் சுற்றி, கொட்டும் மழையில் சைக்கிளில் வைத்து தள்ளிச்சென்று மயானத்தில் அடக்கம் செய்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானநிலையில் இந்த சம்பவம் தற்போது பரவலாக பேசப்பட்டுவருகிறது.