டார்ச் லைட் வெளிச்சத்தில் பிரசவம்; தாய்-சேய் பரிதாப பலி.!



maharashtra Doctor did Delivery With Torchlight Lather Mother and infant Died 

 

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, பப்துப் பகுதியில் அரசு மகப்பேறு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. 

இந்த மருத்துவமனையில் நிறைமாத கர்ப்பிணியான ஷஹீதுன் (வயது 25), பிரசவத்திற்காக அனுமதியாகியுள்ளார். 

பிரசவத்திற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்போது மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் ஜெனரேட்டர் வசதியும் சரியாக செயல்படவில்லை.

இதனால் டார்ச் லைட் வெளிச்சத்தில் மருத்துவர் பிரசவம் பார்த்த நிலையில், தாயும்-சேயும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விஷயம் தொடர்பாக கணவர் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடந்து வருகிறது.