இது புதுசா இருக்கு!! குக்கு வித் கோமாளி சீசன் 7 போட்டியாளர்கள் யாரெல்லாம் பாருங்க!!
ஒரு ராத்திரிக்கு உன் மகளை என்னுடன் அனுப்பு....போலீஸ்காரரின் அசிங்கமான செயலால் கை ஓங்கிய உயர்அதிகாரி! வைரலாகும் வீடியோ!!!
மகாராஷ்டிராவில் தொடர்ந்து வெளியாகும் பாலியல் குற்றச்சாட்டுகள் சமூகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன. குறிப்பாக அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகள், பொதுமக்களின் நம்பிக்கையை பெரிதும் பாதிக்கும் நிலையை உருவாக்கியுள்ளது. சமீபத்தில் அகோலா மற்றும் டோம்பிவிலி பகுதிகளில் நடந்த இரு சம்பவங்கள் இந்த விவாதத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
அகோலாவில் காவல் நிலையத்தில் நடந்த சர்ச்சை
அகோலாவில் 80 லட்சம் ரூபாய் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட பெண் ஒருவர் சிவில் லைன்ஸ் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தார். அப்போது, உதவி ஆய்வாளர் (ASI) ராஜேஷ் ஜாதவ் அந்தப் பெண்ணிடம் தவறான முறையில் நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், "உன் மகளை என்னிடம் அனுப்பிவை; உனக்கு 10,000 ரூபாய் தருகிறேன், வழக்கிலிருந்து விடுவிக்கிறேன்" என பேரம் பேசியதாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டின் கீழ் ராஜேஷ் ஜாதவ் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அவரை மூத்த அதிகாரிகள் நேரில் கண்டிக்கும் காட்சிகளும் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தண்ணீரிலும் கலப்படம்.... ரயில் பயணிகளே பிராண்டட் மினரல் வாட்டர் பாட்டிலில் அசுத்தமான தண்ணீரை நிரப்பி விற்கும் அதிர்ச்சி காட்சி!
டோம்பிவிலியில் ஆசிரியைக்கு ஆபாச குறுஞ்செய்தி
இதனைத் தொடர்ந்து டோம்பிவிலியில் மற்றொரு அதிர்ச்சிகரமான சம்பவமும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அங்கு ஒரு பள்ளி தாளாளரின் மகன், பள்ளி ஆசிரியைக்கு ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பி தொந்தரவு செய்ததாக புகார் எழுந்துள்ளது. இந்தச் சம்பவம் கல்வி அமைப்பின் ஒழுக்க நிலை குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.
இரண்டு சம்பவங்களும் சேர்ந்து மகாராஷ்டிர சர்ச்சை என பரவலாக பேசப்பட்டு வருகிறது. அதிகாரத்தில் இருப்பவர்கள் மற்றும் சமூகத்தில் முக்கிய இடம் வகிப்பவர்கள் இவ்வாறு குற்றச்சாட்டுகளில் சிக்குவது, பெண்களின் பாதுகாப்பு குறித்து மீண்டும் ஒரு முறை தீவிர கவலை எழுப்பியுள்ளது. சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் பல்வேறு தரப்புகளில் வலுத்து வருகிறது.
இதையும் படிங்க: பயங்கர தள்ளுமுள்ளு... போலீஸ் கையை கடித்து குதறிய தவெக தொண்டர்! பரபரப்பு வீடியோ!