மக்கள் கூட்டத்துக்கு நடுவே திடீரென ஓடிய முரட்டு சிங்கம்..! இணையத்தில் வைரலாகும் வீடியோ.!

மக்கள் கூட்டத்துக்கு நடுவே திடீரென ஓடிய முரட்டு சிங்கம்..! இணையத்தில் வைரலாகும் வீடியோ.!


Lion crossing group of people video goes viral

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள மடவப்பூர் என்னும் கிராமத்தில் மக்கள் கூட்டத்துக்கு நடுவே சிங்கம் ஓன்று ஓடிய சம்பவம் வீடியோவாக வெளியாகி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.

இந்திய வனத்துறை அதிகாரி சுசந்த நந்தா என்பவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இந்த வீடியோவில், இளைஞர்கள் சிலர் சாலையில் நின்றுகொண்டிருக்க, மிகப்பெரிய சிங்கம் ஓன்று அவர்களை கடந்து வேகமாக ஓடுகிறது.

சிங்கம் தங்களை நோக்கி வருவதை பார்த்த இளைஞர்கள் அங்கும் இங்கும் ஓடி ஒளிந்துகொள்கின்றனர். சுமார் 7 வினாடிகள் மட்டுமே ஓடும் இந்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.