ஊருக்குள் புகுந்த சிறுத்தையை ஒன்றுகூடி வெளுத்தெடுத்த இளம்கூட்டம்; டப் கொடுத்து பதில் தாக்குதலில் பவர் காட்டிய சிறுத்தை.!



Leopard Attack in Uttar Pradesh Siddardh Nagar 

 

இந்தியாவில் தற்போது கோடைகாலம் என்பதால், கடுமையான வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. வனத்தில் உள்ள விலங்குகள் குடிநீர் மற்றும் உணவு பிரச்சனை காரணமாக மக்கள் வாழும் நகரங்கள் நோக்கி படையெடுக்கின்றன. 

இந்நிலையில், உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள சித்தார்த் நகர் கிராமத்தில் நேற்று காலை சிறுத்தை ஒன்று புகுந்துள்ளது. சிறுத்தை பலரையும் சரமாரியாக தாக்கி இருக்கிறது.

சிறுத்தையை பிடிக்க வனத்துறை அதிகாரிகள் முயற்சி எடுத்தும் பலமில்லாத சூழலில், குடியிருப்பு ஒன்றுக்குள் புகுந்த சிறுத்தையை மக்கள் ஒன்று சேர்ந்து கடுமையாக தாக்கி அடித்து விரட்டினர். 

சிறுத்தையும் தனது ஆக்ரோஷமான தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டது. இந்த விஷயம் குறித்த பதைபதைப்பு காட்சிகள் வெளியாகி இருக்கின்றன.