மறைந்த உரிமையாளர் வருவாரென பிணவறையை சுற்றிச்சுற்றி 4 மாத பாசப்போராட்டம்; நாயின் பாசம்.!

மறைந்த உரிமையாளர் வருவாரென பிணவறையை சுற்றிச்சுற்றி 4 மாத பாசப்போராட்டம்; நாயின் பாசம்.!



kerala-kannur-district-govt-hospital-dog-still-wait-dec

 

கேரளா மாநிலத்தில் உள்ள கண்ணூர் பகுதியைச் சார்ந்தவர், கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னதாக உடல்நலக்குறைவால் கண்ணூர் மாவட்ட மருத்துவமனையில் அனுமதியாகி சிகிச்சை பெற்றார். 

சிகிச்சையின்போதே எதிர்பாராத விதமாக அவரின் உயிர் பிரிந்துவிட, பிணவறைக்கு உடல் எடுத்துச்செல்லப்படும்போது நாய் அவரை கவனித்து வைத்துள்ளது. இதனால் உரிமையாளர் வருவார் என நாய் அங்கேயே இருந்தது. 

இந்நிலையில், பிணவறைக்குள் சென்ற தனது உரிமையாளர் வந்து விடுவார் என நான்கு மாதங்களாக நாய் மருத்துவமனை வளாகத்தையும், பிணவறையையும் சுற்றிய வருகிறது. இது தொடர்பான தகவல் தற்போது வெளியாகி பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.