சரக்கு பங்கு பிரிப்பதில் தகராறு.. ஆண் நண்பரை வெட்டிக்கொலை செய்த பெண்.. பரபரப்பு சம்பவம்.!

சரக்கு பங்கு பிரிப்பதில் தகராறு.. ஆண் நண்பரை வெட்டிக்கொலை செய்த பெண்.. பரபரப்பு சம்பவம்.!



kerala-girl-killed-a-boy-for-alcohol

மதுவை பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில், ஆண் நண்பரை பெண் வெட்டிக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி மாவட்டம் தொடுபுழா நகரில் வசித்து வருபவர் அப்துல் சலாம் (வயது 52). இவரும் அதே பகுதியை சேர்ந்த செலினா என்ற பெண்ணும் இரவு நேரத்தில் ஒன்றாக மது அருந்துவதையும், தொடுபுழா பேருந்து நிலையத்தில் தங்குவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில், சம்பவ தினத்தன்று 2 பேரும் மது அருந்திய போது, மதுவை பிரிப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆவேசமடைந்த செலினா தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அப்துல் சலாமை சரமாரியாக வெட்டி தப்பியோடியுள்ளார்.

இதனையடுத்து அப்துல் சலாம் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், அப்துல் சலாமை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

KERALA

ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அப்துல் சலாம் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பின் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் செலினாவை தேடி கண்டு பிடித்து விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில், அவர் தான் அப்துல் சலாமை கத்தியால் வெட்டியதை ஒப்புக் கொண்டதால், அவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.