தோட்டத்தில் உல்லாசம்.. "ஆ"வென சத்தம்.. உல்லாசத்தின் போது நிர்வாணமாக நடந்த களேபரம்..!

தோட்டத்தில் உல்லாசம்.. "ஆ"வென சத்தம்.. உல்லாசத்தின் போது நிர்வாணமாக நடந்த களேபரம்..!


karnataka-kalaburagi-man-murder-by-affair-woman-and-2-o

கள்ளக்காதலன் தனது மகளின் மீது ஆசைப்பட்டதால், கள்ளக்காதலி மற்றொரு கள்ளக்காதலனுடன் சேர்ந்து கயவனை தீர்த்துக்கட்டிய பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள கலபுராகி, கமலாபுரா நவதாகி கிராமத்தை சார்ந்தவர் சித்தப்பா. இவர் தனியார் நிறுவனத்தில் கம்பியூட்டர் ஆபரேட்டராக பணியாற்றி வரும் நிலையில், இவருக்கு திருமணம் முடிந்து குழந்தைகள் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்னதாக நவதாகி கிராமத்தில் உள்ள மரத்தில், சித்தப்பா நிர்வாணமாக தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த கமலாபுரா காவல் துறையினர், சித்தப்பாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துவிட்டு விசாரணை மேற்கொள்ள தொடங்கினர்.

முதற்கட்ட விசாரணையில், சித்தப்பா நிர்வாணமாக மரத்தில் தொங்கியதால், அவர் தற்கொலை செய்ய வாய்ப்பில்லை என்று கருதிய காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். விசாரணைக்கு பின்னர் சித்தப்பா கொலை செய்யப்பட்டது உறுதியானது. இவ்விவகாரத்தில், சித்தப்பாவை கொலை செய்ததாக அனுசுயா, அவரின் கள்ளக்காதலர் சிவகுமர், கோவிந்த் ஆகிய 3 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். 

karnataka

அனுசியாவின் கணவர் இறந்துவிட்ட நிலையில், சித்தப்பாவுக்கும் - அனுசியாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்த நிலையில், அனுசியாவின் மகள் மீது சித்தப்பாவுக்கு மோகம் ஏற்பட்டுள்ளது. இதனால் அனுசியாவின் மகளுக்கு சித்தப்பா பாலியல் தொல்லை கொடுத்து வரவே, அனுசுயா சித்தப்பாவுடன் பழகுவதை நிறுத்தி இருக்கிறார். இதற்குள்ளாக, சிவகுமார் என்பவருடன் அனுசியாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

அவர்கள் இருவரும் உல்லாசமாக இருந்து வந்த நிலையில், சித்தப்பா தொடர்ந்து அனுசியாவின் மகளை அடைய முயற்சித்துள்ளார். இதனால் சித்தப்பாவை கொலை செய்ய அனுஷியா திட்டமிட்டு, கள்ளக்காதலன் சிவகுமாரிடம் அதனை தெரிவித்துள்ளார். இவர்களின் திட்டப்படி, தோட்டத்திற்கு வந்து உல்லாசமாக இருக்க சித்தப்பாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சித்தப்பாவும் அனுசியாவுடன் உல்லாசமாக இருக்க தோட்டத்திற்கு சென்றுள்ளார்.

karnataka

இருவரும் உல்லாசமாக இருக்கும் போது, அங்கு முன்னதாகவே வந்து காத்திருந்த சிவகுமார், இரும்பு கம்பியால் சித்தப்பாவின் தலையில் தாக்கி கொலை செய்துள்ளார். பின்னர், நிர்வாணத்துடன் இருந்த சித்தப்பாவின் உடலை, தோட்டத்தில் உள்ள மரத்தில் கட்டி தொங்கவிட்டுள்ளனர். இவர்கள் இருவருக்கும் கோவிந்த் என்பவர் உடந்தையாக இருந்ததும் அம்பலமாகவே, மூவரையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.