கல்யாணத்தை க்ராண்டா நடத்தணும்.. வங்கியில் பணத்தை கொள்ளையடித்த வாலிபர் கைது.!

கல்யாணத்தை க்ராண்டா நடத்தணும்.. வங்கியில் பணத்தை கொள்ளையடித்த வாலிபர் கைது.!



Karnataka Hubli SBI Bank Robbery Case Culprit Arrested

திருமணத்தை ஆடம்பரமாக நடத்த வங்கியில் கொள்ளையடித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹூப்ளி கோபிக்கார் சாலையில் எஸ்.பி.ஐ வங்கி செயல்பட்டு வருகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை முகமூடியுடன் அணிந்த நபர், காசாளரிடம் கத்தியை காண்பித்து மிரட்டி ரூ.6 இலட்சத்து 39 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றுள்ளார். 

இந்த கொள்ளை சம்பவம் தொடர்பான காட்சிகள் அங்குள்ள சி.சி.டி.வி கேமிராவில் பதிவான நிலையில், இதுகுறித்து காவல் துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது. புகாரை ஏற்ற காவல் துறையினர் கொள்ளையனுக்கு வலைவீசியுள்ளனர். 

karnataka

விசாரணையில், வங்கியில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது விஜயபுரா மாவட்டத்தை சேர்ந்த பிரவீன் என்பது உறுதியாகவே, அவரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும், திருமணத்தை ஆடம்பரமாக நடத்த வங்கியில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.