எஸ்யுவி காரின் சக்கரத்தில் சிக்கி சிறுமி பரிதாப பலி., நெஞ்சை உறையவைக்கும் அதிர்ச்சி வீடியோ.!

எஸ்யுவி காரின் சக்கரத்தில் சிக்கி சிறுமி பரிதாப பலி., நெஞ்சை உறையவைக்கும் அதிர்ச்சி வீடியோ.!



Karnataka Bangalore 3 Aged Baby Died Accident 

 

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் பகுதியைச் சேர்ந்த மூன்று வயது சிறுமி தனது அடுக்குமாடி குடியிருப்பின் கீழே உள்ள கார் பார்க்கிங் அருகே நின்று கொண்டு இருந்தார். 

அச்சமயம் வழியாக வந்த எஸ்யூவி காரின் ஓட்டுனர் சிறுமி அபர்ணா இருப்பது தெரியாமல் வாகனத்தை இயக்கியுள்ளார். இதனால் சிறுமி காரின் சக்கரத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில், மீட்கப்பட்டவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்ததை தொடர்ந்து, வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிறுமி காரின் சக்கரத்தில் சிக்கி விபத்துக்குள்ளாகும் பதவிக்காட்சிகளும் வெளியாகி இருக்கின்றன.

பச்சிளம் குழந்தைகளை வைத்துள்ள பெற்றோர், எப்போதும் பொறுப்புணர்வுடன் கவனமாக இருக்க வேண்டியதன் அவசியத்தை அறிந்து செயல்பட வேண்டும். அதுவே இவ்வாறான சோகத்தில் இருந்து தப்பிக்க வழிவகை செய்யும்.