#Breaking: இந்திய இராணுவம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்; சரமாரி துப்பாக்கிசூடு.. 3 விமானப்படை அதிகாரிகள் படுகாயம்.!



jk-terrorist-attack-today

 

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத்தை ஒழித்து அமைதியை நிலைநாட்ட இந்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அங்கு எல்லைதாண்டி வந்து இந்தியாவுக்கு எதிரான சதிச்செயலில் ஈடுபடும் பயங்கரவாதிகளை ஒழிக்க, அம்மாநில காவல்துறை, இராணுவம், இந்திய விமானப்படை பயன்படுத்தப்படுகிறது.

அவ்வப்போது பிரிவினைவாத எண்ணம் கொண்டோர் பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்துக்கொண்டு இந்திய இராணுவத்தை எதிர்த்து தாக்குதல் நடத்துவது தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில், இன்று ஜம்மு காஷ்மீர் மாவட்டத்தில் உள்ள பூஞ்ச் மாவட்டப்பகுதியில், இந்திய இராணுவம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

3 விமான படை அதிகாரிகள் இந்த தாக்குதலில் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல் தெரியவந்துள்ளது. இந்திய இராணுவம் பதிலடி தாக்குதல் மற்றும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருக்கிறது.