12 வது மனைவியை கொலை செய்த கணவர்; விசாரணையில் அதிர்ச்சி தகவல் அம்பலம்.!

12 வது மனைவியை கொலை செய்த கணவர்; விசாரணையில் அதிர்ச்சி தகவல் அம்பலம்.!



Jharkhand Husband Killed Wife

 

கணவன் - மனைவி தகராறில் மனைவி கொல்லப்பட்ட சோகம் நடந்துள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள தாராப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் இராமச்சந்திரா. இவரின் மனைவி சாவித்ரி. இராமச்சந்திராவுக்கு 11 திருமணங்கள் நடைபெற்ற நிலையில், அனைவரும் அவரை பிரிந்து சென்றுள்ளனர். 

இதனையடுத்து, 12வது மனைவி சாவித்ரியுடன் வசித்து வந்த நிலையில், சம்பவத்தன்று இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் ஆத்திரமடைந்த இராமச்சந்திரா சாவித்ரியை கொலை செய்துள்ளார்.

Jharkhand

இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், இராமச்சந்திராவை கைது செய்தனர். சாவித்ரியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.