மருத்துவமனை முழுவதும் கொட்டி கிடக்கும் ரத்தம்..! மருத்துவர்கள், நர்ஸ்கள் மீது கொலைவெறி தாக்குதல்.! ஷாக் வீடியோ.!

மருத்துவமனை முழுவதும் கொட்டி கிடக்கும் ரத்தம்..! மருத்துவர்கள், நர்ஸ்கள் மீது கொலைவெறி தாக்குதல்.! ஷாக் வீடியோ.!



issues in Delhi's Apollo hospital today


இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவல் காட்டு தீயாக பரவிவருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. இந்தியாவில் கொரோனா நோய் தொற்று அதிகம் உள்ள மாநிலங்களில் முக்கியமானவை, மகராஷ்ட்டிரா, டெல்லி. இங்கு உள்ள சில மருத்துவமனைகளில் ஆக்சிஜன், படுக்கை வசதி அதிகம் பற்றாக்குறை உள்ளது.

இந்நிலையில், டெல்லி அப்போலோ மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்கு வந்த பெண் நோயாளிக்கு ஐ.சி.யு படுக்கை கிடைக்காததால் உயிரிழந்ததாக நோயாளியின் உறவினர்கள் மருத்துவமனையில் தாக்குதல் நடத்தி உள்ளனர். நேற்று காலை மூதாட்டி ஒருவர் கவலைக்கிடமான நிலையில் அப்போலோ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்டுள்ளார்.


ஆனால் துரதிஷ்டவசமாக சிகிச்சை பலனின்றி மூதாட்டி உயிரிழக்க, ஆத்திரமடைந்த அவருடைய உறவினர்கள் கண்ணில்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். அதுமட்டுமின்றி மருத்துவமனை வளாகத்தையும் அடித்து சேதப்படுத்தியுள்ளனர். இதில் பல ஊழியர்கள் காயமடைந்ததாக அப்போலோ மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.