தயார் நிலையில் ஆதித்யா-எல்1..!! இஸ்ரோவின் அடுத்த அதிரடி ஆரம்பம்..!!

தயார் நிலையில் ஆதித்யா-எல்1..!! இஸ்ரோவின் அடுத்த அதிரடி ஆரம்பம்..!!



isro-has-released-a-photo-of-the-aditya-l-1-spacecraft

ஸ்ரீஹரிகோட்டாவில் தயார் நிலையில் இருக்கும் ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து சந்திரயான்-3 விண்கலம் நிலவினை ஆய்வு செய்ய கடந்த மாதம் 14 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட நிலையில் கடந்த 23ஆம் தேதி மாலை திட்டமிட்டபடி 6.04 மணிக்கு விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இதன் மூலம் நிலவில் கால் பதித்த 4வது நாடாகவும், தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடாகவும் இந்தியா சாதனை புரிந்தது.

இதனை தொடர்ந்து விக்ரம் லேண்டரில் இருந்து இறங்கிய பிரக்யான் ரோவர் ஊர்தி நிலவில் தனது ஆய்வை தொடங்கியது.  இந்த மிகப்பெரிய சாதனையை புரிந்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு உலக அளவில் பாராட்டுகள் குவிந்து வருகிறது. முன்னதாக ரஷ்யா நிலவின் தென் துருவத்தை நோக்கி அனுப்பிய லூனா-25 விண்கலம் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ஸ்ரீஹரிகோட்டாவில் தயார் நிலையில் இருக்கும் ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. சூரியனை ஆய்வு செய்ய செப்டம்பர் 2 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்படவுள்ள ஆதித்யா எல்-1 விண்கலம் பி.எஸ்.எல்.வி-சி 57 ( PSLV - C 57 ) ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.