கள்ளக்காதல் விவகாரத்தில் பயங்கரம்: கணவருடன் சேர்ந்து கள்ளகாதலன், தோழியை கைலாயம் அனுப்பிய பெண்மணி.!

கள்ளக்காதல் விவகாரத்தில் பயங்கரம்: கணவருடன் சேர்ந்து கள்ளகாதலன், தோழியை கைலாயம் அனுப்பிய பெண்மணி.!



Indore Ravi Takur and Sarita Takur Killed by Women and Husband 

 

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூர் பகுதியை சேர்ந்தவர் ரவி தாகூர் (வயது 42). இவர் ஹோட்டல் வைத்து நடத்தி வருகிறார். இவரின் தோழி சரிதா தாகூர் (வயது 38). சரிதா தனது தோழியான மம்தாவை தாகூருக்கு அறிமுகம் செய்ததாக தெரியவருகிறது. 

இதனால் மம்தா - சரிதா இடையே பழக்கம் ஏற்படவே, இருவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். மம்தாவுக்கு நிதின் என்ற கணவரும் இருக்கிறார். 

இதனிடையே, கள்ளக்காதல் விவகாரத்தை அறிந்த நிதின் தனது மனைவியை கண்டித்துள்ளார். அவர் இனி கணவரின் பேச்சை கேட்டு நடக்கலாம் என இருந்த நிலையில், கள்ளக்காதல் மோகம் கொண்ட ரவி தாகூர் அதற்கு சம்மதிக்கவில்லை. 

கள்ளக்காதலை கைவிட மறுத்த தாகூர், நாம் உல்லாசமாக இருந்தபோது எடுத்த தனிமையான விடியோவை வெளியிடுவேன் என மிரட்டி இருக்கிறார். இதனையடுத்து, சம்பவத்தன்று தனது தோழியான சரிதா மற்றும் ரவி ஆகியோரை தனது வீட்டிற்கு பெண்மணி வரச்சொல்லியுள்ளார்.

முதலில் தனது வீட்டிற்கு வந்த சரிதாவை கொலை செய்த தம்பதி, ரவையையும் வீட்டிற்குள் வைத்து படுகொலை செய்தது. பின் உடலை நிர்வாணப்படுத்தி, இருவரும் பிரச்சனை ஏற்பட்டு நடந்த தாக்குதலில் மரணம் அடைந்ததை போல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

ஆனால், காவல் துறையினரின் விசாரணையில் உண்மை அம்பலமாகவே, காவல் துறையினர் நிதின் மற்றும் மம்தாவை கைது செய்தனர்.