#Breaking: முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கைது.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

#Breaking: முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கைது.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.!



India Former Cricketer Vinod Kambli Arrested by Police

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை பந்த்ரா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி வசித்து வருகிறார். இந்நிலையில், இன்று மதிய வேலையில் வினோத் காம்ப்ளி தனது வீட்டின் நுழைவு வாயிலை காற்றினால் மோதி சேதப்படுத்தி இருக்கிறார். சம்பவ இடத்தில் பணியில் இருந்த கவலையுடன் வாக்குவாதம் செய்துள்ளார். 

மேலும், விபத்தை கண்டு என்ன நடந்தது என விசாரணை செய்ய வந்த சக குடியிருப்பாளர்களுடன் வாக்குவாதம் செய்துள்ளார். இதனால் அடுக்குமாடி குடியிருப்பு சங்கத்தின் சார்பில் காவல் நிலையத்தில் கொலை முயற்சி தொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

India

இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து வினோத் காம்ப்ளியை கைது செய்த நிலையில், அவர் சொந்த ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார். அவரின் மீது இந்திய தண்டனைச்சட்டம் 279 பிரிவு, 336-வது பிரிவு வாகனம் ஓட்டுதல், பிறரின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துதல், 427-வது பிரிவு தனியார் சொத்தை சேதப்படுத்துதல் உள்ளிட்டவைகள் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.