கடன் சுமையால் துயரம்.. தம்பதி, 2 குழந்தைகள் தற்கொலை...!



in Hyderabad a Couple Dies by Suicide 

 

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத், ஹப்சிகுடா பகுதியில் வசித்து வருபவர் சந்திரசேகர் ரெட்டி. இவர் அங்குள்ள நாராயண கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இதனால் சந்திரசேகருக்கு கடுமையான நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது. 

குடும்பமே தற்கொலை

சந்திரசேகரின் மனைவி கவிதா. தம்பதிகளுக்கு ஸ்ரீதா ரெட்டி என்ற மகளும், விஸ்வன் ரெட்டி என்ற மகனும் இருக்கின்றனர். 14 வயதாகும் சிறுமி ஸ்ரீதா, அங்குள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறார். 10 வயதாகும் சிறுவன் விஸ்வன், ஐந்தாம் வகுப்பு பயின்று வருகிறார். 

இதையும் படிங்க: டிவி ரிமோட் சண்டையில் துயரம்; பெண் ஐடி ஊழியர் தூக்கிட்டு தற்கொலை.!

Hyderabad

இந்நிலையில், கடந்த 6 மாதமாக நிதிச்சுமையில் தவித்து வந்த குடும்பத்தினர், வீட்டில் தற்கொலை செய்துகொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், அனைவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதையும் படிங்க: அறைக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்த தம்பதி; மரணத்தின் இறுதி நிமிடங்கள்.. பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்.!