திருமணமான 2 நாளில்... துணை ராணுவ வீரரின் அந்த உறுப்பை அறுத்த மனைவி... காவல்துறை விசாரணை!



in-bhar-within-two-days-of-marriage-a-woman-cut-the-gen

பீகார் மாநிலத்தைச் சார்ந்த ராணுவ வீரர் ஒருவருக்கு  திருமணமான இரண்டே நாளில் அவரது காதல் மனைவி ஆணுறுப்பை கத்தியால் குத்தி தாக்கிய சம்பவம்  பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

பீகார் மாநிலம் சீதாமரி என்ற பகுதியைச் சேர்ந்தவர் சூரிய புருஷன் குமார். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த நேகா குமாரி என்பவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். இவர்களது காதல் உறவை தொடர்ந்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு நேஹா  வலியுறுத்தி வந்திருக்கிறார். அவரது அழுத்தம் தாங்க முடியாமல் தனது வீட்டிற்கு  தெரியாமல் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருக்கிறார் சூரிய பூஷன்.

India

இதனைத் தொடர்ந்து காதலர்கள் இருவரும் தங்கள் வீட்டிற்கு தெரியாமல்  பீகார் தலைநகர் பாட்னாவிற்கு வந்து பதிவு திருமணம் செய்துள்ளனர். ஹோட்டலில் தனி அறை எடுத்து தங்கி இருக்கின்றனர். திருமணமான இரண்டாம் நாள் அன்று தன்னுடைய பெற்றோர் வேறு பெண் பார்த்திருப்பதாகவும் அவரை திருமணம் செய்து கொள்ள  வற்புறுத்துவதாகவும்  சூர்யா நேஹாவிடம் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த நேஹா  அப்படி மட்டும் நடந்தால் ஒன்று நான் தற்கொலை செய்து கொள்வேன் அல்லது உன்னை கொலை செய்து விடுவேன் என ஆத்திரத்தில் கூறியிருக்கிறார்.

மேலும் தனது கையில் கிடைத்த கத்தியை எடுத்து அவரது கணவரின் பிறப்புறுப்பில் குத்தியுள்ளார். இதனால் படுகாயம் அடைந்த சூர்யா  ஹோட்டல் நிர்வாகத்தை தொடர்பு கொண்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறை  நேஹாவை கைது செய்து அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிந்துள்ளது.