AVM சரவணன் காலமானார்! முதல் ஆளாக கண்ணீர் அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த்! பெரும் சோகம்..!!
காதலித்த மகள்.. எரித்துக்கொன்று கதை முடித்த தந்தை..!
ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அனந்தப்பூர் மாவட்டம், திலக் நகர் பகுதியில் வசித்து வருபவர் துபகுளா ராம் ஆஞ்சநேயலு. இவருக்கு 4 மகள்கள் இருக்கின்றனர். 3 மகள்களுக்கு திருமணம் முடிந்துவிட்டது. அவர்கள் தங்களின் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள்.
காதலுக்கு எதிர்ப்பு:
இதனிடையே, ஆஞ்சநேயலுவின் நான்காவது மகள் பாரதி (வயது 19), இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த விஷயம் ஆஞ்சநேயலுவுக்கு தெரியவரவே, அவர் காதலுக்கு எதிப்பு தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 16 வயது சிறுமிக்கு பிரசவம்; குழந்தை பிறந்து சிலமணிநேரத்தில் மரணம்..!
தந்தை கைது:
காதலில் உறுதியாக இருந்த பாரதி தந்தையிடம் விருப்பத்தை தெரிவிக்கவே, ஆத்திரமடைந்தவர் பாரதியை கொலை செய்து உடலை எரித்துள்ளார். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், ஆஞ்சநேயலுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: அத்தைகளிடம் அத்துமீற முயற்சி; மகனை துண்டுதுண்டாக்கி பலிபோட்ட தாய்.!