காதலிக்காக மனைவி, குழந்தைகள், நண்பனை கொன்றுவிட்டு கணவன் செய்த பயங்கர சதி திட்டம்.! விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்.!

காதலிக்காக மனைவி, குழந்தைகள், நண்பனை கொன்றுவிட்டு கணவன் செய்த பயங்கர சதி திட்டம்.! விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்.!



husband killed his family for illegal affair

காதலிக்காக மனைவி மற்றும் குழந்தைகளை கொலை செய்து விட்டு, கொலையை மறைக்க நண்பனையும் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்திரப்பிரதேச மாநிலம் நொய்டாவை சேர்ந்த ராஜேஷ் என்பவருக்கும், ரத்னேஷ் என்ற பெண்ணிற்கும் கடந்த 2012-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் இருந்துள்ளார்கள். இந்நிலையில், மூன்று வருடங்களுக்கு முன்பு தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளை காணவில்லை என்று ராஜேஷ் மற்றும் அவரின் மாமானார் ஆகியோர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக விசாரணை நடந்துகொண்டிருந்த நிலையில், திடீரென்று ராஜேஷ் மாயமானார். இதனைத்தொடர்ந்து அப்பகுதியில் கை மற்றும் கால்கள் வெட்டப்பட்ட நிலையில் சடலம் கிடந்துள்ளது. இது காணமல் போன ராஜேஷின் சடலமாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தநிலையில் ராஜேஷின் தந்தையிடம் சடலத்தை காட்டிய போது, இவர் என் மகன் தான் என்று கூறியுள்ளார்.

இதனையடுத்து டி.என்.ஏ சோதனை மேற்கொண்ட போது, ஒத்துப் போகாத காரணத்தினால், இவர் வழக்கு விசாரணை குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் உயிரிழந்ததாக நம்பப்பட்ட ராஜேஷ் ஹரியானாவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

Murder

இதனையடுத்து ராஜேஷிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில் ராஜேஷ்க்கும் ரூபி என்ற பெண்ணிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் காதலுக்கு ராஜேஷின் மனைவி ரத்னேஷ் தொந்தரவாக இருந்த காரணத்தினால் கொலை செய்ய முடிவு செய்துள்ளார். இதனையடுத்து மனைவி மற்றும் குழந்தைகளை கொலை செய்து விட்டு, கணவனும் இறந்துவிட்டதாக இந்த கொலையை மறைப்பதற்கு, அவர் உடலுடன் ஒத்துப் போகும், அவருடைய நெருங்கிய நண்பரான ராஜேந்திரா எனபவரை கடந்த 2018-ஆம் ஆண்டு கொலை செய்து, அவரது கை மற்றும் கால்களை தனியாக வெட்டி அப்பகுதியில் போட்டுவிட்டு, அப்போது இறந்தது நான் தான் என்று நம்புவதற்காக அவருடைய ஐடி கார்ட் மற்றும் ஆதார்கார்ட் போன்றவற்றை அங்கே விட்டுச் சென்றுள்ளார்.

இதனையடுத்து  தன்னுடைய முக அடையாளத்தை மாற்றுவதற்காக மூக்கில் அறுவை சிகிச்சை செய்து கொண்டு ஹரியானாவில் ஒரு தனியார் நிறுவனத்தில் லேபராக வேலை செய்து வந்துள்ளார். இந்தநிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் ராஜேஷ் நடந்த அனைத்தையும் ஒப்புக்கொண்டுள்ளார். காதலிக்காக கட்டிய மனைவி, பெற்ற பிள்ளைகள் மற்றும் நண்பர் உள்ளிட்ட நான்கு பேரை துடி துடிக்க கொலை செய்துள்ள இந்த சம்பவம் சினிமாவையே மிஞ்சும் அளவிற்கு உள்ளது.