மனைவி செய்த செயலால், இரண்டு குழந்தைகளின் கழுத்தை வெட்டிய கொடூரம்!.

மனைவி செய்த செயலால், இரண்டு குழந்தைகளின் கழுத்தை வெட்டிய கொடூரம்!.


husband killed his 2 child for his wife

ஆந்திரபிரதேசத்தின் குர்நூல் மாவட்டத்தில் பானோஜி ராவ் என்பவருக்கும் ஜான்சி  லட்சுமிபாய் என்ற பெண்ணுக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து சமீபத்தில் இவரது மனைவி காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். 

இதனால் சோகத்தில் விரக்தியடைந்த பானோஜி ராவ் நேற்று இரண்டு குழந்தைகளின் தொண்டையிலும் பிளேடால் வெட்டி கொலை செய்துள்ளார். பின்னர் அவரும் தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

தகவலறிந்த காவல்துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.