வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து விழுந்து சோகம்; ஐவர் உடல் நசுங்கி பலி., பதறவைக்கும் காட்சிகள்.. ஒரே நொடியில் பரிதாபம்.!

வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து விழுந்து சோகம்; ஐவர் உடல் நசுங்கி பலி., பதறவைக்கும் காட்சிகள்.. ஒரே நொடியில் பரிதாபம்.!



Haryana Gurugram 5 Died Wall Collapse 

 

ஹரியானா மாநிலத்தில் உள்ள குருகிராம், அர்ஜுன் நகர் பகுதியில் வீட்டின் மதில்சுவர் ஒன்று உள்ளது. இன்று காலை ஒரே குடும்பத்தை சேர்ந்த நபர்கள் வீட்டின் மதில்சுவருக்கு பக்கவாட்டு பகுதியில் உட்கார்ந்து இருந்தனர். 

அச்சமயம் எதிர்பாராத விதமாக மதில் சுவர் திடீரென இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சுவருக்கு அருகே அமர்ந்திருந்த 11 வயது சிறுமி தான்யா, 70 வயது மூதாட்டி தேவி தயாள், 54 வயதுடைய மனோஜ் காபா, 52 வயதுடைய கிருஷ்ண குமார் உட்பட ஐவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். 

படுகாயமடைந்த தீபா பிரதான் என்பவர் மருத்துவமனையில் கவலைக்கிடமான வகையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தின் அதிர்ச்சியூட்டும் காட்சிகள் வெளியாகி உள்ளன.