தேர்வுக்குழுவினர் சஞ்சு சாம்சனின் இதயத்தை சோதிக்கிறார்கள் - ஹர்பஜன்சிங் அதிரடி டுவிட்!

தேர்வுக்குழுவினர் சஞ்சு சாம்சனின் இதயத்தை சோதிக்கிறார்கள் - ஹர்பஜன்சிங் அதிரடி டுவிட்!



harpajan tlk about sanju samson

சமீபத்தில் நடைபெற்ற வங்கதேச அணிக்கெதிரான டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் இடம் பிடித்திருந்தார். ஆனால் அவர் மூன்று போட்டிகளிலும் விளையாடவில்லை.

இந்தநிலையில், இந்தியா-மேற்கிந்திய தீவுகளுக்கு இடையே நடக்கவிருக்கும் போட்டியில் இந்திய வீரர்களின் பெயர்கள் அறிக்கப்பட்டது. 15பேர் கொண்ட இந்திய அணியில் சஞ்சு சாம்சன் பெயர் இடம்பெறவில்லை. இதனால், தேர்வு குழு மீது முன்னாள் வீரர்கள் குற்றச்சாட்டு வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், இது குறித்து அரசியல் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சசி தரூர், ‘வாய்ப்பு ஏதும் கொடுக்காமல் சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டது மிகப்பெரிய ஏமாற்றமாக இருக்கிறது. அவர் மூன்று போட்டிகளில் தண்ணீர் பாட்டில்தான் சுமந்து சென்றார். அதன்பின் உடனடியாக நீக்கப்பட்டுள்ளார். அவர்கள் சஞ்சு சாம்சனின் பேட்டிங்கை சோதிக்கிறார்களா? அல்லது அவருடைய இதயத்தையா?” என அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘‘அவர்கள் சஞ்சு சாம்சனின் இதயத்தை சோதிக்கிறார்கள் என்று யூகிக்கிறேன். தேர்வுக்குழு மாற்றப்பட்டு அதற்கு சரியான நபர்கள் அங்கே இருக்க வேண்டும். கங்குலி தேவையானவைகளை செய்வார் என்று நம்புகிறேன்’’ என்று அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.