இனி என்னோட அம்மாகிட்ட வருவ...நடுரோட்டில் தாயின் கள்ளக்காதலனை விரட்டி விரட்டி குத்திய மகன்....!
குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டத்தில், தாயின் உடன் வாழும் துணையை கத்தியால் குத்திக் கொன்றதாக 20 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொதுமக்கள் முன்னிலையில் நடந்த இந்த கொலை வழக்கு தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
நடுரோட்டில் நடந்த தாக்குதல்
கடந்த ஜூலை 7-ஆம் தேதி நடந்த இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் 35 வயதான கம்லேஷ் வகேலா என போலீசார் தெரிவித்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட ஜெயந்த் வகேலா, கம்லேஷுடன் கடந்த 12 ஆண்டுகளாக உடன் வாழ்ந்து வந்த நீதாவின் மகன் ஆவார். கம்லேஷின் தம்பி கபில் வகேலா அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், சில மணி நேரங்களிலேயே ஜெயந்தை கைது செய்தனர்.
இதையும் படிங்க: ஒரு வருஷமா நடந்த கொடுமை.... 19 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்! இறுதியில் பெண்ணுக்கு நடந்த பேரதிர்ச்சி....பகீர் சம்பவம்!!!
முன்விரோதம் காரணமா?
விசாரணையில், நீதாவின் கணவர் உயிருடன் இருந்த காலத்திலேயே கம்லேஷ் மற்றும் நீதா இணைந்து வாழத் தொடங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஜெயந்துக்கு நீண்ட நாட்களாக கம்லேஷ் மீது விரோதம் இருந்ததாகவும், அதுவே தாக்குதலுக்கான காரணமாக இருக்கலாம் என்றும் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த உறவின்போது நீதாவின் மகளின் திருமணத்தையும் கம்லேஷ் முன்னின்று நடத்தி வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
CCTV காட்சிகள் முக்கிய ஆதாரம்
வெளியான சிசிடிவி காட்சிகளில், ஜெயந்த் ஒரு சந்தின் வழியாக கம்லேஷை துரத்திச் சென்று கூர்மையான ஆயுதத்தால் பலமுறை தாக்குவது பதிவாகியுள்ளது. தாக்குதலின் போது மற்றொரு நபரும் உடனிருந்தது காட்சிகளில் தெரியவந்துள்ளதால், அவரது அடையாளத்தை உறுதி செய்து கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.