கல்யாணம் எப்போ?? குட் நியூஸ் சொன்ன பிக்பாஸ் அருண்.! ரசிகர்கள் வாழ்த்து!!
தோழனின் ஆடையை உருவி மரத்தில் கட்டிவைத்து பெண் கூட்டுப்பாலியல் பலாத்காரம்..! வாக்கிங் சென்றபோது நடந்த பயங்கரம்..!!
மலைப்பகுதியில் நண்பரோடு வாக்கிங் சென்ற பெண்மணி 2 பேர் கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பாலகர் மாவட்டத்தில் வசித்து வரும் இளம்பெண், கடந்த மார்ச் 22 ம் தேதி மாலை நேரத்தில் மலைப்பகுதியில் நடைப்பயிற்சிக்கு சென்றுள்ளார். தனது நண்பருடன் பெண்மணி சென்றுள்ளார்.
அச்சமயம் அவர்களை இடைமறித்த இளைஞர்கள், இருவரையும் மிரட்டி ஆணை பீர் பாட்டிலால் தாக்கியுள்ளனர். பின்னர், அவரின் ஆடைகளை உருவி மரத்தில் கட்டிபோட்டுள்ளனர்.
இளைஞர்கள் வசம் சிக்கிய இளம்பெண்ணை இருவரும் கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனை வெளியே கூறினால் கொலை செய்திடுவோம் எனவும் மிரட்டியுள்ளனர்.
அங்கிருந்து வீட்டிற்கு சென்ற பெண்மணி நடந்ததை கூற, காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் பெண்ணின் ஆண் நண்பரை மீட்டனர். பெண்ணை பலாத்காரம் செய்த இருவரை கைது செய்தனர்.