அடேங்கப்பா, என்ன பொண்ணுடா இது!! நடுரோட்டில் டிராபிக் போலீசிடம் செய்ற வேலையை பார்த்தீர்களா!! வீடியோ !!

அடேங்கப்பா, என்ன பொண்ணுடா இது!! நடுரோட்டில் டிராபிக் போலீசிடம் செய்ற வேலையை பார்த்தீர்களா!! வீடியோ !!


girl fight with traffic police in delhi

டெல்லி மயாபுரி டிராபிக் நிறைந்த பகுதியாகும். இங்கு நேற்று மாலை  டிராபிக் போலீசார்கள் வாகனங்களை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்பொழுது இரு சக்கர வாகனம் ஒன்றில் அனில் பாண்டே என்ற நபரும், மாதுரி என்ற பெண்ணும் ஹெல்மெட் அணியாமல் வந்துள்ளனர். இதனை  கண்ட டிராபிக் போலீசார் அவர்களிடம் ஹெல்மெட் அணியாதது குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். 

அப்பொழுது பின்னால் அமர்ந்திருந்த அந்த பெண் மிகவும் ஆவேசமாக கீழே இறக்கி டிராபிக் போலீஸாரிடம் கூச்சலிட்டு, மிகவும் மோசமாகவும், மரியாதை குறைவாகவும் நடந்துள்ளார். அப்பொழுது போலீஸார் அவர்கள் வந்த பைக்கில் சாவியை எடுத்த போது, அப்பெண் டிராபிக் போலீசார் கையை தட்டிவிட்டு சாவியை எடுத்துள்ளார்.

 மேலும் அவரை தாக்கியும் உள்ளார். பின்னர் அங்கிருந்த சில வாகன ஓட்டிகளிடமும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் அங்கு வாகன நெரிசல் அதிகரிக்கவும் போலீசாரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. 

இதனைத் தொடர்ந்து இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், நடுரோட்டில் மிகவும் மோசமாக நடந்துகொண்ட  அனில் பாண்டே மற்றும் மாதுரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அப்பொழுது இருவரும் கடுமையான போதையில் இருந்துள்ளனர்.