திருமண நிகழ்ச்சியில் நடந்த கோர விபத்து: கேஸ் சிலிண்டர் வெடித்ததில் 2 குழந்தைகள் உட்பட 5 பேர் பலி...!

திருமண நிகழ்ச்சியில் நடந்த கோர விபத்து: கேஸ் சிலிண்டர் வெடித்ததில் 2 குழந்தைகள் உட்பட 5 பேர் பலி...!



gas-cylinder-explosion-kills-5-including-2-children

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நேற்று நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் திடீரென இரண்டு காஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறியது. 

இந்த விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சுமார் 50 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், 

திருமணத்தில், விருந்துக்கு உணவு தயாரிக்கும் இடத்தில் வைக்கப்பட்டிருந்த காஸ் சிலிண்டர்களில் ஏற்பட்ட கசிவால், பெரும்விபத்து நடந்துள்ளது. சிலிண்டர் வெடித்ததில், வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. 

இந்த விபத்தில்,12 பேருக்கு பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட ஐந்து பேர் பலியாகி உள்ளனர். என்றனர்.