அதிகாலையில் ஆந்திர முன்னாள் முதல்வர் அதிரடி கைது..!!

அதிகாலையில் ஆந்திர முன்னாள் முதல்வர் அதிரடி கைது..!!



former-chief-minister-of-andhra-pradesh-chandrababu-nai

ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆந்திர மாநிலம், நந்தியாலா பகுதியில் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று அதிகாலை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக ஆந்திர மாநிலத்தில் புதிய ஐ.டி நிறுவனங்கள் அமைக்க அனுமதி அளிக்க சட்டவிரோதமாக 118 கோடி ரூபாய் பெற்றதாக சந்திரபாபு நாயுடு மீது ஊழல் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் சந்திரபாபு நாயுடு நந்தியாலா டி.ஐ.ஜி தலைமையிலான காவல்துறையினரால் இன்று கைது செய்யப்பட்டார். முன்னதாக அதிகாலை 3 மணிக்கு கைது செய்ய காவல்துறையினர் வந்த நிலையில், அவரை கைது செய்ய கட்சி தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

நந்தியாலா பகுதியில் நேற்று கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற சந்திரபாபு நாயுடு தனது வாகனத்தில் இரவு ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தார். அப்போது, இன்று அதிகாலை 3 மணியளவில் நந்தியாலா போலீஸ் டிஐஜி தலைமையில் அதிக அளவிலான போலீசார் சந்திரபாபுவை கைது செய்ய சென்றனர்.

இதற்கிடையே, சந்திரபாபு நாயுடு எஸ்.பி.ஜி எனப்படும் சிறப்பு படைப்பிரிவின் பாதுகாப்பில் இருப்பதால் அதிகாலை 5.30 மணிவரை அவரை கைது செய்ய அனுமதி அளிக்க முடியாது என்று எஸ்.பி.ஜி படைப்பிரிவினர் தெரிவித்த நிலையில், விடியும் வரை அங்கே காத்திருந்த காவல்துறையினர், சந்திரபாபு நாயுடுவை காலை 6 மணிக்கு கைது செய்தனர்.

இதனை தொடர்ந்து, கைது செய்யப்பட்ட சந்திரபாபு நாயுடு விஜயவாடா அழைத்து செல்லப்பட்டார். ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்ட சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.