மருமகளின் கழுத்தை அறுத்துவிட்டு, மாமனார் செய்த காரியம்.! மகன் இல்லாத நேரத்தில் நடந்த விபரீதம்!!

மருமகளின் கழுத்தை அறுத்துவிட்டு, மாமனார் செய்த காரியம்.! மகன் இல்லாத நேரத்தில் நடந்த விபரீதம்!!



Father in law killed daughter in law at karnataka

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள வடக்கேக்கரா என்ற பகுதியில் வசித்து வந்தவர் சினோஜ். இவரது மனைவி 34 வயது நிறைந்த ஷானு. இவர்களுடன் சினோஜின் தந்தையான 67 வயது நிறைந்த செபாஸ்டியனும் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் செபாஸ்டியனுக்கும், ஷானுவுக்கும் இடையே அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

அவ்வாறு நேற்று சினோஜ் வீட்டில் இல்லாத போது ஷானு மற்றும் செபாஸ்டியன்க்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்பொழுது கோபமடைந்த செபாஸ்டின் அங்கிருந்த கத்தி ஒன்றை எடுத்து ஷானுவின் கழுத்தை அறுத்துள்ளார். இந்நிலையில் ரத்தம் சொட்ட சொட்ட ஷானு தெருவுக்கு ஓடியுள்ளார். பின்னர் மயங்கி விழுந்துள்ளார். இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மேலும் போலீசாருக்கும் தகவல் அளித்துள்ளனர்.

karnataka

இதற்கிடையில் செபாஸ்டின் கதவை பூட்டிக் கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் செபஸ்டியான் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஷானுவும் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.