பெண்ணிற்கு சிறுநீரக பாதையை சோதனை செய்த மருத்துவர்கள்! சோதனையில் அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்!

பெண்ணிற்கு சிறுநீரக பாதையை சோதனை செய்த மருத்துவர்கள்! சோதனையில் அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்!


doctors-shocked-in-medical-test

உத்திரபிரதேச மாநிலத்தில் பெண்ணின் சிறுநீரக பாதையில் இருந்து மிகப்பெரிய கல் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது.

உத்திரபிரதேச மாநிலத்தில் சஹாரன்பூர் பகுதியை சேர்ந்த பெண் நட்ஷா. இவரது சிறுநீரக பாதையில் கல் ஒன்று இருந்துள்ளது. இந்தநிலையில் நட்ஷா சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவரது சிறுநீரக பாதையில் 22 செ.மீ. நீளமும், 60 கிராம் எடையும் கொண் கல் இருந்துள்ளது.

stone

சிறுநீரக பாதையில் பெரிய அளவிலான கல் இருந்தும் அந்த பெண்ணிற்கு எந்தவித வலியும் ஏற்படவில்லை. இந்நிலையில் நீண்ட நேர அறுவை சிகிச்சைக்கு பின்னர் இந்த கல் நீக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், இது உலக அளவில் மிக பெரிய கல் ஆகும். இதற்கு முன் 21.5 செ.மீ. அளவிலான கல் நீக்கப்பட்டு உள்ளது.

மேலும் அந்த பெண்ணிற்கு 4 மணிநேரம் நடைபெற்ற அறுவை சிகிச்சையில் ரோபோ பயன்படுத்தி ஒரே கட்டத்தில் கல் நீக்கப்பட்டுள்ளது. ரோபோ பயன்படுத்தியதால் தழும்பு இல்லாமல் அதிவிரைவில் பழைய நிலைக்கு திரும்பி விடலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.