என்னது.. பணத்திற்காகவா.! நிக்கோலை திருமணம் செய்ய காரணம் இதுதான்.! ஓப்பனாக உடைத்த நடிகை வரலட்சுமி!!
நடத்தை சந்தேகத்தால் காதலி கொடூர கொலை; கண்களை பிடுங்கி, 50 முறை கத்தியால் கிழித்து கொடூரம்.!
நடத்தை சந்தேகத்தால் காதலி கொடூர கொலை; கண்களை பிடுங்கி, 50 முறை கத்தியால் கிழித்து கொடூரம்.!
புதுடெல்லியில் உள்ள ஷகுர் பஸ்தி இரயில்வே யார்ட் பகுதியில், 25 வயதுடைய இளம்பெண்ணின் சடலம் ஜனவரி 25 அன்று கண்டெடுக்கப்பட்டது. பெண்மணி குறித்து விசாரிக்கையில், அவர் ரஷ்மி என அடையாளம் காணப்பட்டார்.
விசாரணையில், அவரை காதலித்து வந்த 21 வயது நபர் பாண்டவ் குமார், பெண்ணை இறுதியாக பேச வேண்டும் என அழைத்து சென்று, பெண்ணின் நடத்தை பிரச்சனையில் கொலை செய்தது தெரியவந்தது.
பெண்ணை தனியாக அழைத்து சென்ற குமார், உடலில் 50 இடங்களில் சரமாரியாக வெட்டி, கண்களை கத்தியால் குத்தி எடுத்து கொடூர கொலை செய்துள்ளார்.
குற்றவாளியை கண்டறிய அங்குள்ள பல்வேறு சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்த அதிகாரிகள், இறுதியாக தான் தங்கியிருந்த வீட்டில் இருந்து தப்பிச்செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டார்.