வந்தே பாரத் இரயிலில் தரமற்ற உணவுகள் வழங்கப்பட்டதால் அதிர்ச்சி: பயணிகள் அவதி.! 

வந்தே பாரத் இரயிலில் தரமற்ற உணவுகள் வழங்கப்பட்டதால் அதிர்ச்சி: பயணிகள் அவதி.! 



Delhi Varanasi Express waste Food Served 

 

புதுடெல்லியில் இருந்து வாரணாசி நகருக்கு இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்த பயணிகளுக்கு வழங்கப்பட்ட தரமற்ற உணவு தொடர்பான தகவல் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஜனவரி 6-ம் தேதி டெல்லி - வாரணாசி இடையே இயங்கும் வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்த பயணி ஒருவர், உணவைப் பிரித்துப் பார்த்தபோது அதில் துர்நாற்றம் வீசியுள்ளது. 

இதனால் பாதிக்கப்பட்டவர் வீடியோ எடுத்து அதனை தனது சமூக வலைதளத்தில் பதிவிடவே, சம்பந்தப்பட்ட விஷயத்திற்கு வருத்தம் தெரிவித்த ஐஆர்சிடிசி ஒப்பந்ததாரருக்கு ரூபாய் 25 ஆயிரம் அபராதம் விதித்ததாகவும் தெரிவித்துள்ளது.