உலகையே ஆட்டிப் படைக்கும் கொரோனா! வீட்டில் இந்திய கிரிக்கெட் வீரர் செய்த காரியத்தை பார்த்தீர்களா! பிசிசிஐ வெளியிட்ட வீடியோ!

உலகையே ஆட்டிப் படைக்கும் கொரோனா! வீட்டில் இந்திய கிரிக்கெட் வீரர் செய்த காரியத்தை பார்த்தீர்களா! பிசிசிஐ வெளியிட்ட வீடியோ!


cricket-player-shreyas-ayyer-done-magic-in-he

சீனாவில் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகமெங்கும் அதிதீவிரமாக பரவி வருகிறது. மேலும் இந்தியாவில் இந்த கொரோனா வைரஸ் பரவிய நிலையில் 300க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில் உலகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரபடுத்தப்பட்டு வருகின்றது. மேலும் ஞாயிற்றுக்கிழமை இன்று உலகம் முழுவதும் சுய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

Cricket  player

 மேலும் கொரோனா அச்சத்தால் உலகம் முழுவதும் கிரிக்கெட் போட்டிகள் பலவும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் விளையாட்டு வீரர்கள் அனைவரும் வெளியே எங்கும் செல்லாமல் வீட்டிற்குள்ளேயே தங்களது பொழுதை கழித்து வருகின்றனர். 

 இந்நிலையில் மும்பையைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரரான ஷ்ரேயஸ் அய்யர் என்பவர் மேஜிக் செய்வதில் திறமை வாய்ந்தவர். இவர் தனது வீட்டில் தன் சகோதரி நடாஷாவுடன் இணைந்து சீட்டுக்கட்டு மேஜிக்கில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் இந்த வீடியோவை பிசிசிஐ, ஷ்ரேயஸ் நாம் அனைவரும் வீட்டில் அடைந்து கிடக்கும் வேலையில் நாம் பொழுதுபோக்கும் வகையில் இதனை செய்துள்ளார். எங்களுக்கு புன்னகையை கொண்டு வந்ததற்கு நன்றி சாம்பியன் என்ற பதிவிட்டு வெளியிட்டுள்ளனர்.