11 வயது சிறுமியின் கருவைக் கலைக்க அனுமதி மறுத்த நீதிமன்றம்; காரணம் என்ன?.!

11 வயது சிறுமியின் கருவைக் கலைக்க அனுமதி மறுத்த நீதிமன்றம்; காரணம் என்ன?.!



Court refuses permission to abort 11-year-old girl Rajasthan

 

ராஜஸ்தான் மாநிலத்தில் வசித்து வரும் 11 வயது சிறுமி, அவரது சொந்த தந்தையால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதனால் சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், கர்ப்பமான சிறுமிக்கு தற்போது 32 வாரங்களாகின்றன. 

சிறுமியின் தரப்பில் கருவை கலைக்க அனுமதி கேட்டு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யவே, நீதிபதிகள் சிறுமியின் உடல் பரிசோதனையை மேற்கொள்ள உத்தரவிட்டனர். இதனை அடுத்து தரவுகள் கிடைத்த பின்னர் இந்திய அரசியலமைப்புச் சட்டம் 21-வது பிரிவின்படி 32 வாரங்கள் ஆகும் கருவினை கலைக்க அனுமதி இல்லை என்று கூறி உத்தரவிட்டிருக்கின்றனர். 

மேலும் சிறுமியின் வயிற்றில் உள்ள கரு உரிய எடை மற்றும் நலத்துடன் இருப்பதால், அதனை கலைக்க உத்தரவிட இயலாது என்றும் கூறியிருக்கின்றனர். அதேபோல இந்த தருணத்தில் சிறுமியின் கருவை கலைக்க உத்தரவிட்டால், அது அவரது உயிருக்கே ஆபத்தாக முடியலாம் என்பதால் தங்களால் அனுமதி வழங்க இயலாது என்று கூறியுள்ளனர்.