இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 80,472 பேருக்கு கொரோனா பாதிப்பு.! இன்று மட்டும் உயிரிழப்பு எவ்வளவு தெரியுமா?

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 80,472 பேருக்கு கொரோனா பாதிப்பு.! இன்று மட்டும் உயிரிழப்பு எவ்வளவு தெரியுமா?



corona increased in india

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 80,472 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 62,25,764 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மற்றும் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கடந்த 24 மணிநேரத்தில் 1,179 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்தியாவில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 97,497 ஆக உயர்ந்துள்ளது. 

corona

கடந்த 24 மணிநேரத்தில் 86,428 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதன்மூலம் இதுவரை 51,87,826 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். தற்போது இந்தியா முழுவதும் 9,40,441 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.