ஓடும் காரில் கல்லூரி மாணவியை கதற கதற கூட்டு பலாத்காரம் செய்த இளைஞர்கள்... பின்னர் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்!!

ஓடும் காரில் கல்லூரி மாணவியை கதற கதற கூட்டு பலாத்காரம் செய்த இளைஞர்கள்... பின்னர் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்!!



College girl gang raped in moving of the car in west tripura

மேற்கு திரிபுரா மாவட்டம் அமடாலி பைப்பாஸ் சாலையில் நள்ளிரவில் இளம்பெண் ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அதனை அவ்வழியாக வந்த சிலர் பார்த்து இளம்பெண்ணை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்து உடனே போலீசில் புகார் கொடுத்துள்ளார். போலீசார் வந்து விசாரணை நடத்தியதில் இளம்பெண் ஓடும் காரில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு சாலையில் வீசி செல்லப்பட்டது தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணிடம் மேற்கொண்ட விசாரணையில் இரவில் வீடு திரும்பும் போது தனக்கு நன்கு பழக்கமான கௌதம் சர்மா என்ற நபர் காரில் வந்து அழைத்தார். நன்கு பழக்கமானவர் என்பதால்  காரில் ஏறினேன் அங்கு மேலும் இரண்டு நபர்கள் இருந்தார்கள். அப்போது ஓடும் காரில் என்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார்கள். 

West tripura

நான் அவர்களிடமிருந்து தப்பிக்க முயன்ற போது மூன்று பேரும் சேர்ந்து என்னை மடக்கி போட்டு கூட்டு பலாத்காரம் செய்து விட்டு சாலையில் வீசி சென்றதாக இளம்பெண் கூறியுள்ளார். அதனையடுத்து போலீசார் கௌதம் சர்மாவை கைது செய்து தலைமறைவான இரண்டு நபர்களை தேடி வருகின்றனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.