கணவன் மேல் ஆத்திரம்.. பச்சிளங்குழந்தைகளை துடிக்க துடிக்க கொன்ற கொடூர தாய்!

கணவன் மேல் ஆத்திரம்.. பச்சிளங்குழந்தைகளை துடிக்க துடிக்க கொன்ற கொடூர தாய்!



Children killed ahead of parents fight

ஆந்திராவில் கணவன் ஏற்பட்ட சண்டையால் மனைவி பெற்ற குழந்தைகளை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தில் முப்பல்லா கிராமத்தை சேர்ந்த தம்பதியர் அஜய் குமார் மற்றும் கோத்தா ஜெனிட்டா. இவர்களுக்கு 2.5 வயது மற்றும் 3 மாத குழந்தைகள் இருந்தனர்.

Muder

கணவன் மனைவி இருவருக்கும் நேற்று காலை ஏதோ ஒரு விஷயத்திற்காக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கோபத்தில் கணவர் வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார்.

கணவன் மேல் இருந்த ஆத்திரத்தில் ஜெனிட்டா தனது இரண்டு குழந்தைகளையும் தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்துள்ளார். மூச்சு திணறிய 2 குழந்தைகளும் இறந்துவிட்டனர். குழந்தைகளின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.