சாலையில் நடந்து சென்ற 10 வயது சிறுமியை கடத்தி கூட்டு பலாத்காரம் செய்த சிறுவர்கள் கைது..!!
பீகார் மாநிலத்தில் உள்ள போத்கயா பகுதியில் இருக்கும் காவல் நிலைய பகுதியில் உள்ள பண்ணை அருகே 10 வயது சிறுமி தனியாக நடந்து சென்றுள்ளார்.
அப்போது அந்த சிறுமியை, அந்த வழியாக சென்ற மூன்று சிறுவர்கள் கடத்திச் சென்று, கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இது குறித்து தொடர்பாக சிறுமி தன் பெற்றோரிடம் கூறியுள்ளார் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த மூன்று சிறுவர்களையும் கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது