விரும்பிய பெண் கிடைக்காததால்.. சாமி சிலையை திருடிய இளைஞர்.!

விரும்பிய பெண் கிடைக்காததால்.. சாமி சிலையை திருடிய இளைஞர்.!



Boy theft God statue in uttarpradesh for marriage proposal

விரும்பிய பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என்ற வேண்டுதல் நிறைவேறாததால் சாமி சிலையை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்திரபிரதேசம் மாநிலம் கவுஷாம்பி மாவட்டத்தில் உள்ள மகிவாகாட் கிராமத்தை சேர்ந்த 27 வயது இளைஞர் சோட்டு. இவர் அதே கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்வதற்கு விரும்பியுள்ளார்.

UttarPradesh

ஆனால் அவருடைய பெற்றோர் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் எப்படியாவது பெற்றோரை சமாதானப்படுத்தி, கடவுளை வேண்டி அந்த பெண்ணை திருமணம் செய்துவிடலாம் என நினைத்துள்ளார்.

இதற்காக அந்த பகுதியில் உள்ள சிவன் கோயிலில் தினமும் வழிபாடு செய்து வேண்டுதல் வைத்துள்ளார். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வழிபாடு செய்தும் தன்னுடைய வேண்டுதல் நிறைவேறாததால் ஏமாற்றம் அடைந்த இளைஞர் கோயிலில் உள்ள சிவன் சிலையை திருடியுள்ளார்.

UttarPradesh

இதனையடுத்து அங்கு வந்த பக்தர்கள் சிலை இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சந்தேகத்தின் பேரில் சோற்றுகை கைது செய்து விசாரணை செய்ததில் அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். இதனையடுத்து சிலையை வைத்து கோயிலில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.