அது போலீஸ் ஸ்டேஷன்னா இல்ல பெட் ரூம்மா? எஸ்.ஐ மற்றும் பெண் காவலரின் அத்துமீறிய அந்தரங்க வீடியோ வெளியீடு.... அதிரடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்! ரகசியம் வீடியோவால் பரபரப்பு...!!!



bihar-si-video-controversy-suspension

பீகார் மாநிலம் சிவானில் காவல்துறையைச் சிக்கலில் ஆழ்த்தும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ரகுநாத்பூர் காவல் நிலையத்தில் பணியாற்றிய உதவி ஆய்வாளர் மற்றும் பெண் காவலர் தொடர்பான காட்சிகள் இதில் இடம்பெற்றுள்ளன. சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தவுடன், இருவரும் உடனடியாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். தற்போது, இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.

ரகசியமாக படம் பிடித்த வீடியோ

தகவலின்படி, ஒரு அறையின் வென்டிலேட்டர் வழியாக யாரோ ரகசியமாக இந்த காட்சிகளை பதிவு செய்துள்ளனர். வீடியோவில் பின்னணியில் காவல்துறை சீருடைகள் தென்படுவது கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது. இதன் மூலம் சம்பவம் காவல் நிலையத்துக்குள் நடந்ததாக சந்தேகம் எழுந்துள்ளது.

பிளாக்மெயில் முயற்சி சந்தேகம்

இந்த வீடியோ சர்ச்சையை பயன்படுத்தி, சிலர் சம்பந்தப்பட்டவர்களை மிரட்டி பணம் மற்றும் பிற சலுகைகள் கேட்டு வந்ததாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால், இது திட்டமிட்ட முறையில் நடத்தப்பட்ட சதியாக இருக்கலாம் என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: மாற்றுத்திறனாளிப் பெண்ணிடம் அருவருப்பாக நடந்து கொண்ட போலீஸ் அதிகாரி! தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்? வைரல் வீடியோ!

அதிரடி நடவடிக்கை – பணி இடைநீக்கம்

விவகாரம் உயரதிகாரிகளுக்கு சென்றதும், இருவரும் முன்னதாகவே வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டிருந்தனர். ஆனால் வீடியோ பொதுவெளியில் வெளியானதால், சிவான் எஸ்பி பூரன் குமார் ஜா உடனடி நடவடிக்கை எடுத்தார். ஒழுக்க விதிமுறைகளை மீறியதாக கருதி, உதவி ஆய்வாளர் சுஜித் குமார் மற்றும் பெண் காவலர் இருவரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். மேலும், சம்பவத்தின் பின்னணி குறித்து உயர்மட்ட விசாரணை நடைபெற்று வருகிறது.

 

இதையும் படிங்க: இளைஞரை மரத்தில் தலைகீழாக கட்டித் தொங்கவிட்டு.... உடலில் மிளகாய்ப் பொடி பூசிய கொடூரம்! தந்தை கெஞ்சியும் விடல... பழைய பகையை தீர்க்க இப்படியொரு தண்டனையா? பகீர் சம்பவம்!!!