நாடே அதிர்ச்சி.. 60 வயது கிழவனால் 3 வயது சிறுமி பலாத்காரம்.. அந்தரங்க உறுப்புகளில் காயம்.!

நாடே அதிர்ச்சி.. 60 வயது கிழவனால் 3 வயது சிறுமி பலாத்காரம்.. அந்தரங்க உறுப்புகளில் காயம்.!



Bihar Patna 3 Aged Child Girl Abused by 60 Aged Relative Old Man

பாட்னா ஹாஜிபூர் நகரில், 60 வயது முதியவர் மூன்றரை வயது பேத்தியை பலாத்காரம் செய்த கொடூரம் நடந்துள்ளது.

பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னா ஹாஜிபூர் நகரில், கடந்த டிசம்பர் 16 ஆம் தேதி நிகழ்ச்சி ஒன்று நடந்துள்ளது. இந்த நிகழ்ச்சிக்காக குடும்பத்தினர் வந்திருந்த நிலையில், 60 வயதான முதியவரும் வந்துள்ளார். 

கடந்த டிச. 16 ஆம் தேதி நிகழ்ச்சி நடந்த நிலையில், முதியவர் 3 வயது பெண் குழந்தையை வீட்டின் மாடிக்கு தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட குழந்தை உடலில் ஏற்பட்ட காயத்தினால் கதறி அழுதுள்ளது. 

குழந்தையின் தாயார் முதலில் தனது குழந்தையை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்துவிட்டு, முதியவர் குறித்து புகார் அளிக்க விரைந்துள்ளார். அவரை இடைமறித்த உறவினர்கள், புகார் அளிக்கவிடாமல் தடுத்துள்ளனர். 

Bihar

இப்படியான நிலையில், குழந்தையின் தாய் விஷயம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் குழந்தையை சீரழித்த முதியவர் மற்றும் குற்றத்தை மறைக்க உடந்தையாக இருந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

வழக்கின் அதிர்ச்சி தகவலாக குழந்தையின் தாய் அளித்த புகாரில், குழந்தையின் இரத்தம் நிறைந்த ஆடைகள், தலையணைகள் மற்றும் பெட்சீட்டுகள் துவைக்கப்பட்டதும் உள்ளது. மேலும், குழந்தையின் அந்தரங்க உறுப்பிலும் காயம் இருந்துள்ளன.